எப்ப வேணும்னாலும் பெண்களின் அறைகளுக்குள் புகுந்து விடுவார் வைரமுத்து,..! பாடகி சின்மயி பகிரங்க குற்றச்சாட்டு.! 

எப்ப வேணும்னாலும் பெண்களின் அறைகளுக்குள் புகுந்து விடுவார் வைரமுத்து,..! பாடகி சின்மயி பகிரங்க குற்றச்சாட்டு.! 

பி.எஸ்.பி.பி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாகவும் ராஜகோபாலனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. 

இந்நிலையில், வைரமுத்துவால் நான் பாதிக்கப்பட்டு அவரைப் பற்றி கருத்து கூறியபோது எனக்கு ஆதரவாக பேசவில்லை என்றும், பலர் என்மேல் அவதூறாகப் பேசினார்கள் என்றும் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். 


 இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சின்மயி "லீகலா போங்கன்னு கருத்து தெரிக்க விட்டுட்டு இருக்குற மக்களுகக்கு - NCW-ல கேஸ் பதிவு பண்ணி, அவங்க 3 Reminders குடுத்து, ஒரு லேடி Officer வீட்டுக்கு வந்து, எங்கிட்டயும், என் தாயார், என் கணவர், மூன்று பேர் கிட்டயும் கையழுத்துல கம்ப்ளைன்ட வாங்கிட்டு போயாச்சு.


மேடை மேடையா ஏறி திரு ராதா ரவி அவர்கள் என்ன அவமானப்படுத்துனதும் அவசர அவசரமா விசாரணை  பண்ணாம என்ன Ban பண்ணது, எதனாலன்னு எல்லாருக்கும் தெரியும்.


எனக்கு முன்னாடி இன்னொரு பெண் 'ராதா ரவி வீட்டுக்கு வந்து சந்திச்சா மட்டும்தான் டப்பிங் யூனியன் கார்டு தருவேன்னு சொல்றாரு’ ன்னு Facebookல பதிவு பண்ணுனதுக்கே அவங்கள ban பண்ணுனாரு.

இதுவரைக்கும் 17 பெண்கள் திரு வைரமுத்து அவர்களைபற்றி புகார் குடுத்துருக்காங்க. 
@krupage பல பெண்கள் கிடட பேசி இந்த report பதிவு பண்ணாங்க. இதையெல்லாம் மறுப்பது ஏன்? 

ரைஹானா Madam - அவர் அப்டித்தான்னு பேட்டி குடுப்பாங்க. 
மாலினி யுகேந்திரன் 'என் கண்ணு முன்னாடி நடந்தது’ன்னு சொல்லிருக்காங்க 
புவனா சேஷன் - அவருக்கு ஒத்துழைக்கலன்னு அவங்க career நாசம் பண்ணி விடடார்னு பேட்டி குடுத்துருக்காங்க 
Us-லிருந்து சிந்து ராஜாராம் Mediaல பேட்டி குடுத்தாங்க

அவர் நடத்துற hostelல பெண்கள் தப்பிச்சு ஓடிடவேண்டிய நிலைமை வந்திருக்கு. எப்ப வேணும்னாலும் பெண்களின் அறைகளுக்குள் புகுந்து விடுவார்னு சொல்லிருக்காங்க. அதெல்லாம் மறைச்சுட்டு, சின்மயி மட்டும் தான் சொன்னாங்க, வேற யாருமே சொல்லலைன்னு என் பொய்  சொல்றாங்க? ஏன்னு கேள்வி கேக்க கூடாதோ?

அறியப்படடவர்கள் மீது பழி சுமத்துவது வழக்கமாகிவிடடாது"ன்னும், "ஆதாரங்களை வெச்ச்சுருக்கேன்"னு சொன்னவர், இத்தனை நாள்ள Defamation case போட்டுருக்கலாமே? அதெல்லாம் பண்ணுனா அவர் மன்னிப்பு குடுக்கறேன், என்ன பத்தி பேச வேண்டாம்னு சொல்லுன்னு சொன்ன  phone call expose ஆகுமே

என்ன மட்டும் குறி வைத்து, என் case investigate பண்ணாம, என்ன மட்டும் வேலை செய்ய விடாம ban பண்ணுனது அயோக்கியத்தனம். அத நான் கேள்வி கேக்க கூடாதுன்னு  சொல்றதும் அயோக்கியத்தனம் தான். 
இத்தனை நாள்ல ஒரு ICC set பண்ணிருக்கலாமே? Independent investigation நடத்திருக்கலாமே?
ஏன் பண்ணல?

நான் என் குற்றக்காட்டுகளை முன்வைத்தப்போ பார்ப்பனர்களின் சதி, மோடியின் சதி, Rafale லிருந்து divert பண்ண சதி, publicity stuntன்னு , முற்பொற்க்கு, பெண்ணியவாதம் பேசும் அரசியல்வாதிகள் இஷ்டத்துக்கு பேசுனாங்க.


நக்கீரன் magazineல, பாஜக எனக்கு Bangalore-ல வீடு குடுத்து, கவிஞர் மேல அபாண்டமா பழி சுமத்த வெச்சாங்கன்னு கேவலமா பொய் சொன்னாங்க. 
தெரியாமத்தான் கேக்குறேன். 
இத்தனை பேர் இவருக்கு மட்டும் பொங்கும் கட்டாயம் என்ன? அவர் ஒரு பாடலாசிரியர் தானே? ஏன் இப்படி அடிச்சுக்குறீங்க?

அவரோட அரசியல் நண்பர்கள் பெயரை பயன்படுத்தி பெண்களை அச்சுறுத்துறது, மெரட்டுறது உண்மைதான். இது பல ஆண்டுகளா open a நடந்துட்டு தான் இருக்கு. இதெல்லாம் யாரு மூடி மறைத்தாலும், இல்லவே இல்லைன்னு பொய் சொன்னாலும்.  நான் கேள்வி கேட்டுகிட்டே டான் இருப்பேன்

MeToo புகார்களை investigate பண்ண ஒரு தனி GoM, திரு ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமைல ஆரம்பிக்கறதா  சொன்னாங்க. எதுவுமே நடக்கல. 
https://indianexpress.com/article/india/metoo-movement-govt-sets-up-gom-headed-by-rajnath-singh-to-deal-with-sexual-harassment-cases/
தமிழ்நாட்டுல பண்ணலாமே? 
Film Industry ICC எப்ப set பண்ணுவாங்க?


என்னோட Case Investigate பண்ணுங்கன்னு நான் கேட்டுட்டு தான் இருக்கேன். 
ஆனா, யார் பெயரை use பண்ணி பெண்களை மெரட்டுறாரோ, அவங்களே எதுவுமே நடக்காத மாதிரி, இவரை மேடை ஏற்றி மகுடம் சூட்டி, பெரிய்ய யோகியர் மாதிரி scene போடறதெல்லாம் ஒரு பாலியல் குற்றவாளிய encourage பண்ணுற மாதிரி தான். End" எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த நீண்ட பதிவுக்கு பலர் பல விதமாக பதிலளித்து வருகிறார்கள்.