புதிய மின்மாற்றியை திறந்து வைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்...!

புதிய மின்மாற்றியை திறந்து வைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்...!

திருவள்ளூர்  அருகே புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை திறந்து வைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னிகைபேர் கிராமத்தில் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் சேதமடைந்ததையடுத்து  அப்பகுதியில் புதியதாக மின் மாற்றி நிறுவப்பட்டது. இந்நிலையில், அமைக்கப்பட்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் மின் சாதன பொருட்கள் சேதமடைந்து வந்தது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் சீரான மின் விநியோகம் செய்யும் வகையில் புதியதாக மின் மாற்றி நிறுவப்பட்டது. 

இந்நிலையில் மின் மாற்றி நிறுவப்பட்ட இடத்தின் அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் திடீரென மின் மாற்றியை நிறுவ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் அந்த நபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மின் மாற்றியை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் மின்மாற்றியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

இதையும் படிக்க    } தடுப்பணை கட்டும் கேரள அரசு...! தூங்கிக் கொண்டிருக்கும் விடியல் அரசு... !! த.பெ.தி.க கண்டனம்...!!!

பொதுமக்களின்  இந்த சாலை மறியல் காரணமாக பெரியபாளையம் - ஜனப்பன்சத்திரம் சாலையில் சுமார் 30நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இதையும் படிக்க    } தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்... வைகோ...!!