தி.மு.க ஆட்சி காலத்தின் போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு அனைத்து தரப்பை சேர்ந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர். இந்த சமத்துவபுரத்தில் வீடுகளோடு, சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம், குடிநீர், தெருவிளக்கு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. தி.மு.க ஆட்சிகாலத்தின் போது கொண்டுவரப்பட்ட சமத்துவபுரங்கள் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. இதனால் சமத்துவபுரங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.