ஒரு கோடியை தாண்டிய இணைப்பு.. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

ஒரு கோடியை தாண்டிய இணைப்பு.. மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிப்பு

100 யூனிட் மின்சாரம்

ஆதார் இணைப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவியது. குறிப்பாக 100 யூனிட் இலவச மின் திட்டம் நிறுத்தப்படுமா, மின் கட்டணம் செலுத்த முடியாமல் போகுமா என மின்நுகர்வோர் குழப்ப நிலையில் இருந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. 

சிறப்பு முகாம்கள்

அதன்படி, கடந்த மாதம் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 2,811 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டன. இதில், பொதுமக்கள்  நேரடியாக வந்து ஆதாரை இணைத்து கொள்ளலாம் என மின்துறை அறிவித்தது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதாரை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அந்தந்த மின் கட்டண அலுவலகங்களில் விழிப்புணர்வு பாதாகைகள் வைக்கப்பட்டன. 

ஆன்லைன் வசதி

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்காமல் எளிதில் ஆதாரை இணைக்க முக்கியத்துவம் வழங்கப்பட்டன. அதேபோல், செல்போன் மற்றும் கணினி வாயிலாக ஆன்லைன் மூலம் பலர் ஆதாரை இணைத்தனர்.

மேலும் படிக்க: அப்பாவின் உற்ற நண்பருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் மகன்..!

1.09 கோடி பேர் இணைப்பு

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு பெற்றுள்ள 2.37 கோடி மின்நுகர்வோரில் 1.09 கோடி பேர் சிறப்பு முகாம் மற்றும் ஆன்லைன் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.