தமிழகத்தில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று புதிதாக ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   

தமிழகத்தில் புதிதாக 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த பாதிப்பு 26 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் ஆயிரத்து 581 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, தமிழகத்தில் கொரோனாவால் இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 204 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கோவையில் அதிகபட்சமாக 201 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 16 ஆயிரத்து 893 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 25 லட்சத்து 91 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.