சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் மண்டலம் 13 மற்றும் 9 ஆகிய இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறினார். குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா வந்தாலும் மற்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.