

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா நோய் தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 557 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் நாமக்கல் அடுத்த மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது வீட்டிலேயே அந்த மாணவி தனிமைபடுத்தப்பட்ட நிலையில், அவருடன் பயிலும் சக மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பள்ளி வளாகத்திலேயே வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.