தமிழகத்தில் நேற்று ஆயிரத்து 756 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, இன்று ஆயிரத்து 859 ஆக சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது, அம்மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.