ரூ.1,000 மேல்முறையீடு; வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி தொடக்கம்!

Published on
Updated on
1 min read

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியது. 

கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால், அச்சமயம் நிறைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததால், மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி, அக்டோபர் 25-ந் தேதி வரை முதல் முறையாக நிராகரிக்கப்பட்ட பெண்கள், 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல் முறையீடு செய்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். 

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மேல்முறையீடு செய்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com