கச்சா எண்ணெய் விலை உயர்வு!!.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் முடிவடைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு!!.. விரைவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு
Published on
Updated on
1 min read

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்பனையாகிறது. ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி, கடந்த 109 நாட்களாக, பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

தேர்தல் விரைவில் முடியவடைய உள்ள நிலையில், விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் என தெரிகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com