பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம்.. கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய 7 மாணவ-மாணவிகள்!!

பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சேலத்தில் 7 மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அசத்தினர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பயணம்.. கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய 7 மாணவ-மாணவிகள்!!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தன்னார்வ அமைப்பு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஏழு பேர் கண்களை கட்டிக்கொண்ட சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு செய்தனர். இந்த சைக்கிள் பயணத்தை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஏற்காடு அடிவாரம் பகுதியில் தொடங்கிய சைக்கிள் பயணம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, தமிழ்சங்கம் சாலை வழியாக 13 கிலோ மீட்டர் கடந்து காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.

சைக்கிள் பயணத்தின் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இருபுறமும் இளைஞர்கள், பெண்களை சைக்கிளை ஓட்டிச் சென்றனர். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com