சைக்கிளில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு...  செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு... 

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று காலை சைக்கிளில் பேரணியாக செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சைக்கிளில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு...  செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு... 

தமிழக காவல் இயக்குனராக உள்ள டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் வாரம் இறுதி நாட்களில் சைக்கில் பேரணி செல்வது வழக்கம் அந்த வகையில் இன்று காலை அவர் சைக்கில் பேரணியாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும் கடந்த தேர்தலின் போது செங்கல்பட்டில் எந்த குற்ற சம்பவங்களிலும் நடைபெறாமல் சிறப்பாக செயல்பட்ட குற்றப்பிரிவு காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு சான்றிதழ், ஊக்க தொகை வழங்கினர். மேலும் காவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும், எனவும் கூறினார். அத்துடன் காவலர்கள் குடியிருப்புக்கு சென்று காவலர்களின் குழந்தைகளுடன் ஊக்கம் அளிக்கும் பேச்சு வார்த்தை அளித்தார். அத்துடன் அங்கு இருந்த அனைத்து மாணவர்களுக்கும் டிஜிபி எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட அவர் திருக்கழுக்குன்றம் வழியாக மாமல்லபுரம் சென்றார்.