பாஜகவின் செயலுக்கு திமுக கொடுத்த பதிலடி!

பாஜகவின் செயலுக்கு திமுக கொடுத்த பதிலடி!

நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு விவகாரம் தொடர்பாக, மதுரையில் போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அஞ்சலி செலுத்த சென்ற பி.டி. ஆர்:

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கார் மீது செருப்பு வீச்சு:

அதன் பின்னர் நிதியமைச்சர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி காரில் சென்று கொண்டிருந்த போது, மதுரை விமான நிலைய வளாகத்தில் நிதியமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது சிலர் காலணிகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுகவினர் போராட்டம்:

இந்த நிலையில் சம்பவத்தை கண்டிக்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட திமுகவினர்  மதுரை ரயில் நிலையத்தில் திடீரென காவல்துறையின் தடுப்புகளை தாண்டி அத்துமீறி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து திருச்செந்தூர் முதல் பாலக்காடு வரை செல்லக்கூடிய ரயில் இஞ்சின் மீது ஏறி பாஜகவை கண்டித்தும், அண்ணாமலையை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். திமுகவினர் ரயிலில் ஏறி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது ரயில்வே நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் பேச்சுவார்த்தை:

பாஜகவினரின் அநாகரிகமான செயலை எதிர்த்து, திமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுகவினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, திமுகவினர் ரயிலில் இருந்து கீழே இறங்கினர்.