
தமிழ்நாட்டின் பாரம்பரிய மஞ்சள் நிறம் என்றும், அந்த நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வழங்கினார்
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதற்கு மாற்று வழியாக மஞ்சள் பை பயன்படுத்துகிறோம். மஞ்சள் கலர் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமே மஞ்சள் தான். எனவே மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம் என்றார்.