மத்திய பாஜக அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி!

மத்திய பாஜக அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசை கண்டித்து  ஆளுநர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் போலீசார் அத்துமீறி புகுந்து நிர்வாகிகள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்திய ஜனநாயகத்தில் இது ஒரு துக்க நாள் என குறிப்பிட்ட கே.எஸ்.அழகிரி, மத்திய அரசை கண்டித்து தமிழக ஆளுநர்  மாளிகை முன்பு இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, நாளை மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, மோடி சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.