"திமுக நகராட்சி தலைவர், துணைத் தலைவரை பதவி நீக்குக" ...! - ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...!

"திமுக நகராட்சி தலைவர், துணைத் தலைவரை பதவி நீக்குக" ...! - ஈரோட்டில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...!

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி திமுக தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. நகராட்சி சந்தை கடையில்  இயங்கி வந்த மாட்டிறைச்சிக் கடைகளை அகற்றியதால்  இறைச்சிக் கடை உரிமையாளர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.  இறைச்சி கடைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று இருவரும்  தீர்மானம் கொண்டு வந்ததை செயல்படுத்த முடியாது என்று வெளியேறிய நகராட்சி ஆணையரை இருவரும் தகாத வார்த்தைகளால் பேசியதால் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையரை பணி செய்ய விடாமல் தொடர்ந்து அவமதிக்கும் நோக்கோடு செயல்பட்டு வரும்  திமுகவைச்  சேர்ந்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனம் மற்றும் துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோரை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சந்தை கடையில் கடந்த 50 ஆண்டுகளாக 13 மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. அந்த கடைகளை திமுக நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவரின் தூண்டுதலின் பேரில் நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி அகற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கடைகளை மீண்டும் அதே இடத்தில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தநர். இவ்வாறிருக்க, கடந்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற அவசர கூட்டத்தில் கடைகள் சந்தை கடையில் செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது என திமுகவை சேர்ந்த புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தனர். 

அப்போது இதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளதால் இந்த தீர்மானத்தை செயல்படுத்த முடியாது என புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் சையது உசேன் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திமுக நகராட்சித் தலைவர் ஜனார்த்தனம் மற்றும் துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் அவரது அலுவலகத்துக்குள் நுழைந்து அவரை தள்ளிவிட்டும் தகாத வார்த்தைகளில் பேசியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் சையத் உசேனை அவரது பணியை  செய்யவிடாமல் தொந்தரவு செய்து வருவதாகவும், உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, புஞ்சை புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் மற்றும் துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், ஆணையாளர் சையது உசேன் பணிபுரியும் நகராட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, 

இதையும் படிக்க    } தொழிற்சாலைகள் சட்டம்...! திமுகவின் வரலாற்றுப் பெருந்துரோகம் -சீமான்!!!

இன்று தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையும் படிக்க    } தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்... வைகோ...!!