ஆரிய மாயை தோற்றத்தை அகற்ற ..... உருவான இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்...! - ஐ.பெரியசாமி.

நாங்கள் பூணூலை பார்க்கவில்லை......

ஆரிய மாயை தோற்றத்தை அகற்ற ..... உருவான இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்...! - ஐ.பெரியசாமி.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுகவின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரியகுளம் வடகரை அரசு பணிமனையின் முன்பாக நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது பேசுகையில் இனி தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சி இல்லை இல்லை என கூறியதோடு, தமிழ்நாட்டில் இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுக தான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், மத்தியில் ஆலும் பாஜக அரசு பல்வேறு துறைகளை வைத்து நெருக்கடிகள் கொடுத்தாலும், தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய முழுவதிலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவுவார்கள் என சூளுரைத்தார்.

மேலும் "ஆரிய மாயை தோற்றத்தை அகற்றுவதற்காகவே உருவான இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். இந்தியாவில் உள்ள  முதலமைச்சர்களில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு ஈடாக இருக்க முடியாது என்றும்,  தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவிற்கே முன்னோடியாக துவங்கப்பட்டுள்ளது. என்றும், திராவிட மாடல் ஆட்சி என்பது வாய் சொல்லல்ல அது ஒரே நாடு, தமிழ்நாடு ஒரே மொழி  தமிழ் மொழி, ஒரே தலைவர் மு க ஸ்டாலின் என்பதுதான்", என்று  கூறினார்.  . 

இதையும் படிக்க      } வெளியானது +2 தேர்வு முடிவுகள்... எந்த மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்...!

மேலும் குலக்கல்வி திட்டத்தை அகற்றி அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கியது திராவிட ஆட்சிதான், நாங்கள் பூணூலை பார்க்கவில்லை அனைத்து சமுதாய மக்களும் நீதித்துறையில் இடம் பெற்றதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி, உண்மையான கம்யூனிசத்தையும் எல்லோருக்கும் எல்லாம் சமம் என்ற அடிப்படையை கொண்டு வந்தது தான் திராவிட மாடல் ஆட்சி,  தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வரியை பெற்றுக் கொண்டு திருப்பச் செலுத்தாத மத்திய அரசு மற்றும் தமிழகத்தில் எந்த கட்சிக்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்வதற்கு தகுதியில்லை, எடப்பாடி அவர்களுக்கு என்ன யோகிதை இருக்கிறது..? என சாடினார்.

இறுதியாக அண்ணா திமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் திமுக பக்கம் வருவார்கள் ஏனென்றால் அந்த கட்சியில் ஒரு சாரார் பக்கமே சென்று கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் என்றென்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சூரியன் பக்கம் தான் இருக்கிறார்கள் தேனி மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதி வெற்றி உறுதி செய்யப்பட்டது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதையும் படிக்க      } நாடாளுமன்ற தேர்தல்: முதலமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ...அவரே அடுத்த பிரதமர் - உதயநிதிஸ்டாலின்!