இருசக்கர வாகன பேரணியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு!!!

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து கோவை மாவட்ட காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் பேரணி சென்றுள்ளனர்.
இருசக்கர வாகன பேரணியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு!!!
Published on
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பிலும் மாநகர காவல் துறை சார்பிலும் போதைப்பொருள் தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வடவள்ளி பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த இருசக்கர வாகன பேரணியை பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வடவள்ளி ரவுண்டானா வழியாக முல்லை நகர் செக் போஸ்ட் சென்று கல்விரம் பாளையத்தில் இந்த விழிப்புணர்வு பேரணி நிறைவு பெற்றது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com