சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜனநாயக ரீதியாக தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என்று குறிப்பிட்டார்.
அதிமுகவில் சசிகலாவின் இணைப்பு குறித்த தொண்டர்களின் எண்ணத்தையே பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்த தினகரன், ஜெயலலிதா மரணம் என்ற பெயரில் அரசியலுக்காக விசாரணை ஆணையம் அமைத்து மக்கள் வரிப்பணத்தை திமுக அரசு வீணடித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
பதவியை இழந்ததும் எடப்பாடி பழனிசாமி அரசியலில் பலவீனமாக உள்ளார் எனவும் கூறியுள்ளார்.