"அடக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்தவர் இமானுவேல்" - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

"அடக்கப்பட்டோருக்கு குரல் கொடுத்தவர் இமானுவேல்" - மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இமானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அவரை நினைவு கூர்ந்துள்ளார். 

இமானுவேல் சேகரனின் நினைவு தினம்:

இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று, ராமநாதபுரம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் ட்வீட்:

இந்நிலையில், அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணிதிரட்டியவர் இமானுவேல் என முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளான இன்று, அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூர்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com