இம்மானுவேல் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் - சீனிவாசன் கோரிக்கை!

இம்மானுவேல் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் - சீனிவாசன் கோரிக்கை!

சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என பாஜக மாநில பொதுசெயலாளர் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி:

சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிக்க: தெலுங்கு திரையுலகின் ”ரெபல் ஸ்டார் ” காலமானார்.. அரசியலிலும், சினிமாவிலும் தடம் பதித்தவர்..!

பேராசிரியர் சீனிவாசன் கோரிக்கை:

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.