ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது... இன்ஜினியரிங் ஆன்லைன் கிளாஸ்...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அடுத்த மாதம் 18ம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்டோபர் 8 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி உரிமையை நிலைநாட்டத் தவறிய திமுக அரசுக்கு கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடல் எதிரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை நீதிமன்றம் கேள்வி ..!
புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு பின், காரைக்கால் மீனவர்கள் 16 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்களின் வசதிக்காக கடந்த 2009-ம் ஆண்டு மீன் பிடித்துறைமுகம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அப்போது இருந்த படகுகளின் அடிப்படையில் மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை கட்டுவதில் நெரிசல் ஏற்படும் காரணமாக படகுகள் சேதம் அடைவதாகவும், இதுகுறித்து பலமுறை அரசுக்கு தெரிவித்தும் எந்த ஒரு பயனும் இல்லை எனவும், வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய ஒதுக்கப்பட்ட 72 கோடி ரூபாயை மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்த வலியுறுத்தியும், இ.பி.சி பட்டியலில் உள்ள மீனவர்களை ஏற்கனவே இருந்தது போல எம்.பி. சி பட்டியலில் இணைக்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காரைக்கால் கடற்கரை சாலையில் கடந்த 18ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்து இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதாக அறிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் ஒன்றின் பின் ஒன்றாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றது.
இதையும் படிக்க | புலிகள் இறப்பு குறித்து தொடா் ஆய்வு - அமைச்சா் மதிவேந்தன்!
தனியார் ஆம்னி பேருந்துகளில் நடைபெறும் கட்டண கொள்கையை கண்டித்து அதற்கேற்றார்போல அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டில் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்து கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. கடந்த வாரம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை,, மிலாடி நபி, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பிய பொது தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு வாசூலிக்கப்பட்டதால் கடும் அவதியடைந்த்தனர். விடுமுறை நாட்களில் தமிழக அரசு சார்பில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. மேலும், அரசு பேருந்துகள் தரம் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தனியார் பேருந்துகளில் பயனிக்கின்றனர்.
இதனை பயன்படுத்தி விமான கட்டணத்திற்கு சமமாக தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளில் நடைபெரும் கட்டண கொள்ளையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். பண்டிகை நாட்க்ள் மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து தனியார் பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும், கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . தனியார் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையில் இருந்து சாமனிய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை”.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | "பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது நல்ல செய்தி" - தமிமுன் அன்சாரி
பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறியது துணிச்சலான முடிவு என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க ஆதரவு கோரி சேலம் நெடுஞ்சாலை நகரில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் சிறைவாசிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஆதரவு கோட்டதாகவும் தெரிவித்தார். அதோடு, பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறும் துணிச்சலான முடிவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டதாகக் கூறினார்.
மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் மூலம் ஆல் இந்திய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்தியாவிற்கு ரோல் மாடலாக திகழ்வதாகவும், தமிழ்நாட்டிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிக்க | "காவிரி விவகாரத்தில் திமுக தவறு செய்கிறது" - புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
அரசு பள்ளியின் தரம் குறைவாக உள்ளதற்கு ஆசிரியர்களை சரியாக நிரப்பாதது தான் காரணம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கை ஒழிக்கு போராட்டங்களை நடத்தி வருவதாகவும், 371 ஊராட்சிகளில் டாஸ்மார்க் கடைகளை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், திமுக பல்வேறு வகையான வாக்குறுதிகளை கொடுத்டிருந்தாலும் அவற்றில் ஒரு சில வாக்குறுதிகளை தவிர மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
அந்த வகையில் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, ”மக்களை சாதி ரீதியாக தான் பிரிக்க வேண்டும் என்றால் அது ஏற்புடையது இல்லை எனவும், அரசு வேலையில் குறைவான அளவில் மட்டுமே வேலை கிடைக்கிறது என்றும், இடஒதுக்கீட்டால் இளைஞர்களுக்கு தேவையான வேலையை கொடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். அரசு பள்ளியின் தரம் குறைவாக உள்ளதற்கு காரணம், ஆசிரியர்களை சரியாக நிரப்பாததுதான்”, என குற்றம் சாட்டினார்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்து என்னுடைய நிலைப்பாடு என்பது காத்திருந்தால் நல்ல முடிவு கூட வரலாம் என்பது தான் எனக் கூறியவர், கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “எனக்கு கிடைத்த தகவல்படி பாஜக மேலிடம் 5 மாநில தேர்தலுக்கு பிறகு கூட மீண்டும் அதிமுகவை கூட்டணியில் சேர்க்கலாம் ; இது நடக்கலாம் அல்லது, நடக்கமாலும் போகலாம்” எனவும் கூறினார்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி குறித்த கேள்விக்கு:
“நிலையற்ற தன்மை நிகழ்கிறது. திமுகவை 40 க்கு 40 நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்தி , மாவட்ட செயலாளர்களை பதவி நீக்க செய்ய வேண்டும் என்பது எனது எண்ணம்”, என்றார்.
மேலும், “காவிரி விவகாரத்தில் திமுக செய்வது மிகவும் தவறு, தற்போது அவர்கள் எதிர்கட்சியாக இருந்து வேறு ஏதேனும் கட்சி ஆட்சியில் இருந்தால் இப்படி தான் இருப்பார்களா ? எனக் கேள்வி எழுப்பியதோடு, தன்னுடைய கட்சியின் நலன்,தன் குடும்பத்தின் நலனுக்காக நாட்டு மக்களின் நலனை கெடுப்பது நியாமனது அல்ல”,என அவர் கூறினார்.
இதையும் படிக்க | ”தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது” - முதலமைச்சர்