திமுக ஆட்சிக்கு பிறகு...2 மடங்கு உயர்ந்த மாணவர் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி பதில்!!

திமுக ஆட்சிக்கு பிறகு...2 மடங்கு உயர்ந்த மாணவர் சேர்க்கை! அமைச்சர் பொன்முடி பதில்!!
Published on
Updated on
1 min read

நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்களால் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்திருந்த பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 


சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி,  வால்பாறையில் பாலிடெக்னிக் கல்லூரி துவங்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த திமுக ஆட்சியில் 2006ல் வால்பாறை தொகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது எனவும், ஆனாலும் அங்கும் பல இடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறினார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளை பொறுத்த வரையில், கடந்த 10 ஆண்டுகளில் குறைந்து காணப்பட்ட மாணவர் சேர்க்கையானது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் நான் முதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டத்தால் 2 மடங்கு அதிகரித்து  1.20 லட்சமாக மாறியிருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com