உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட விரும்புகிறது- சரத்குமார்

வரவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட விரும்புகிறது என அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட விரும்புகிறது- சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திண்டுக்கலில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது, 

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திண்டுக்கல்லில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நாதன்  இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு  மணமக்களை வாழ்த்தினார், பின்னர் சரத்குமார் செய்தியாளரிடம் பேசுகையில்,,,

திமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆன பிறகுதான் அவர்கள் செயல்பாடு குறித்து கூற முடியும் அந்தவகையில் அவர்கள் கடந்த ஆண்டுகளை விட என்ன சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அவற்றை செய்ய அவர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தேவைப்படும் அதன் பிறகு திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கூற முடியும் என்றார்.

மேலும் கொடநாட்டில் அசம்பாவிதம் நடந்துள்ளது உண்மை அதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது அதில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுவதற்கு ஏன் பயப்பட வேண்டும் நியாயமான முறையில் எல்லோரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தானே அவர்களை விசாரணை நடத்துவதில் தவறில்லை என கூறிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து மீண்டும் விசாரணை நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்துபேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை 9 மாவட்டங்களில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்வம் காட்டி மனுக்கள் கேட்டு வருகின்றனர் என்றும் மக்களுக்கு யார் யாரெல்லாம் சேவை செய்ய நினைக்கிறார்களோ அவர்களே போட்டியிட வேண்டும் என்று கூறி இருக்கிறேன் என்றார்.