எல்லா சமுதாயத்திற்கும் உரிய சமூக நீதி வேண்டும்.... ஜி.கே.மணி!!

எல்லா சமுதாயத்திற்கும் உரிய சமூக நீதி வேண்டும்.... ஜி.கே.மணி!!

கொங்கு வேளாளர் மக்களுக்கு தொகுப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் பாமகவின் கௌரவ தலைவரான ஜி கே மணி கோரிக்கை வைத்துள்ளார்.

தீரன் சின்னமலையின் 267 வது பிறந்த நாளையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் கௌரவ தலைவர் ஜிகே மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் அவரது திருவுருவ சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜிகே மணி, இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பவர் தீரன் சின்னமலை எனவும் இந்திய மக்களிடையே சுதந்திர வேட்கையை விதைத்தவர் தீரன் சின்னமலை எனவும் அவரது பிறந்தநாளில் அவர் தியாகத்தை போற்றுவோம் எனவும் கூறினார்.

மேலும் ஓடாநிலையில் முட்புதர்கள் மண்டி கிடந்த தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ராமதாஸ் ஐயா தான் புதிய மணிமண்டபம் அமைப்பதற்கு வழிவகை செய்தார் எனவும் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு இடத்தில் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எல்லா சமுதாயத்திற்கும் உரிய சமூக நீதி வேண்டும் என்று கேட்பதாகவும் வேளாண் சமூகத்தினர் அதிகமாக வாழும் கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர் மக்களுக்கும் தொகுப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறோம் எனவும் வலியுறுத்தி கூறினார்.

இதையும் படிக்க:  நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்த வைகோ...!!