மோசடி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்...!

மோசடி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்...!

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரை சென்னை மத்திய குற்றப்புலனாய்வு காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.  

ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி.  அவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதாக புகாரளித்துள்ளார்.  அவர் அளித்துள்ள புகாரில் அவரது பெயர் முத்துலட்சுமி எனவும் அரசாங்க வேலைக்காக முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவரை ஒருவர் தொடர்பு கொண்டு 11 லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும் ஆனால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் புகாரில் கூறியுள்ளார்.  இந்த புகாரை விசாரித்த மத்திய குற்றப்புலனாய்வு  காவல்துறை புகாரின் அடிப்படையில்  அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி மற்றும் ஓட்டுநர் விஜய் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப் புலனாய்வு காவல்துறையினா்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஊழலில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ.... பதவி விலக கோரி போராட்டம்!!