ராஜேந்திர பாலாஜி இருக்கும் சிறை அறையில் இதற்கு முன் யார் இருந்தார் தெரியுமா? அவருக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?!!

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் இருந்த அறையில் தற்போது முன்னாள்  அடைக்கப்பட்டுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி இருக்கும் சிறை அறையில் இதற்கு முன் யார் இருந்தார் தெரியுமா? அவருக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?!!

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3.10 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 15நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜி நீதிபதியிடம் சிறையில் தனக்கு ஏ கிளாஸ் சிறை வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருச்சி மத்திய சிறையில் உள்ள உயர்பாதுகாப்பு கொண்ட தொகுதி எண் 2ல் அறை எண் 4ல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த அறையில் இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டையே மிகவும் பரபரப்புக்குள்ளாக்கிய சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, அவர் பாதுகாப்பு காரணமாக வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.ராஜேந்திர பாலாஜிக்கு சிறையில் பிற கைதிகளுக்கு வழங்கப்படும் காலை தயிர்சாதம், புளிசாதம் காலையில் வழங்கப்பட்டது. மதியம் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.