முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு..!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு..!

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியில் நீர் இருப்பு 23 புள்ளி 48 அடியாகவும், கொள்ளளவு 3 ஆயிரத்து 500 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெள்ள நீர் போக்கி வழியாக, விநாடிக்கு 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.