அறுவடை செய்த வாழைப்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக அளித்த விவசாயி...

அறுவடை செய்த வாழைப்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக அளித்த விவசாயி...

தஞ்சையில்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக இரண்டரை டன் வாழைப்பழங்களை இலவசமாக விவசாயி ஒருவர் வழங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடி உள்ள நிலையில் வாழை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வாழைத் தோப்பில் வீணாகும் நிலையில் வாழைகள் இருந்த நிலையில் அதனை பயனுள்ள வகையில் நோயாளிகளைக் அழிக்கலாம் என முடிவு செய்து தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தை சேர்ந்த வாழை விவசாயி மதியலகன் கடந்த ஆண்டு விழாவின்போது இரண்டு வாழைப்பழங்களை நோயாளிகளுக்காக இலவசமாக வழங்கினார்.

அதேபோல இந்த ஆண்டு தனது வயல்வெளிகளில் உள்ள இரண்டரை டன் வாழைப்பழங்களை சொந்த செலவில் வெட்டி வாகனத்தில் எடுத்துவந்து நோயாளிகளுக்காக வழங்குவதற்காக தோட்டக்கலைத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். பலரும் பல வகையில் நோயாளிகளுக்கும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உதவி வரக்கூடிய நிலையில் வாழை விவசாயம் தான் நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை உண்டு செய்யும் வகையில் பூவன் வாழைப்பழம் 55 ஆயிரம் வாழைப்பழத்தை வழங்கியுள்ளதாகவும் மேலும் விளைந்தவுடன் அடுத்த வாரம் மீண்டும் வாழைப்பழம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.