நெல் கொள்முதல் செய்ய மறுப்பதால் விவசாயிகள் முற்றுகை போராட்டம்..!

நெல் கொள்முதல் செய்ய மறுப்பதால் விவசாயிகள் முற்றுகை போராட்டம்..!

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மூலம் கோபி, சத்தி, அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 24 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது.

தற்போது கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான டி.என் பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி, பாரியூர், கூகலூர், காசிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கான அறுவடை பணிகள் துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நன்செய் புளியம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில்  அரசு விதிப்படி 17 சதவீதத்திற்கும் மேல் ஈரப்பதம் உள்ள விவசாயிகள், நெல்லை கொள்முதல் செய்யாமல் கடந்த 8 நாட்களாக காலம் தாழ்த்தி வந்ததால், இன்று 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நெல்கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஈரப்பதத்தை அளவிடும் இயந்திரத்தைக் கொண்டு  சோதணை செய்ததில் இயந்திரத்தின் காலவதி தேதி முடிவடைந்தது தெரியவந்தது.

இதனால் அங்கிருந்த விவசாயிகள் இயந்திரத்தை மாற்றி வேறொறு இயந்திரம் கொண்டுவரக் கோரி, ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் செய்யப்படாததல் கோபி, பங்களாபுதூர் சாலையில் மலைபோல் நெல்களை குவித்து வைத்து விவசாயிகள் காத்திருந்தனர். நெல்கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல்களை கொள்முதல் செய்துகொண்டால் தான் மீதமுள்ள நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் நெல்லை அறுவடை செய்யமுடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

பின்னர் கொள்முதல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள நெல்ää மழை பெய்தால் முற்றிலும் வீணாகி விடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் மீண்டும் காலம் தாழ்த்தி விவசாயிகளை அலைகழிக்க வைத்ததால் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்