பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை...

வாலாஜாபாத் அவலூர் செல்லும் தரைப்பாலம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 4வது நாளாக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் குளங்கள் நிரம்பி வருகிறது. அந்த நிலையில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் இருந்து அவலூர் செல்லும் தரைப்பாலம் முற்றிலுமாக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தரை பாலத்தை தாண்டி 20 ஆயிரம் கனஅடி  நீர் செல்வதால் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் மற்றும் அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், தம்மனூர்,இளையனார்வேலர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும்  தொழிற்சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி தான் செல்ல வேண்டும் அல்லது திருமுக்கூடல் வழியாகத்தான் செல்ல வேண்டும். மற்றும் வாலாஜாபாத் அவலூர் தரைப்பாலத்தில் வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதால் சுற்றியுள்ள 12 பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.