ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் இன்று தொடக்கம்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் இன்று தொடக்கம்

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

விவசாயிகளுக்கு விரைவில் இலவசமாக ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். அதன்படி, பல்வேறு காலக்கட்டங்களில் விண்ணப்பித்து பலா் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஒரு லட்சம் மின் இணைப்புகளில் எவற்றையெல்லாம் சோ்க்கலாம் என ஆலோசனை நடைபெற்றது. அந்த பட்டியல் தயாா் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. 4 மாதத்துக்குள் இலக்கு நிா்ணயித்து அதற்கான பணிகளை நிறைவு செய்யவும், வரும் மாா்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு, தேர்தல் முடிந்த பிறகே விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 25 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கான ஆணையை வழங்க உள்ளார்.