குக்கிராமத்திலிருந்து நாசா -வுக்கு... செல்லும் 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி.

குக்கிராமத்திலிருந்து  நாசா -வுக்கு... செல்லும் 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள செம்பகனம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த ஆறு கிராமங்களில் இருந்து 130 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதே பகுதியை சார்ந்த 8 ம்  வகுப்பு படிக்கும் மாணவி ஷோபனா. இவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட வானவில் அறிவியல் மன்றம் சார்பில் நடைபெற்ற  புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டிகளில் கலந்து கொண்டார்.

பள்ளி அளவில் ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் தேர்வு பெற்ற இந்த மாணவி அண்மையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் "காற்றின்  அழுத்தம் மற்றும் நீர் அலாரம்"  என்ற தலைப்பில் இவர் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பு முதல் பரிசை பெற்றது. 

மேலும், இந்த பரிசு பெற்றமைக்காக இவர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள  விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு  கல்வி சுற்றுலா செல்ல உள்ளார். இதே போல பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற பல்வேறு பிரிவுகளில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கோடை கால கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனர்.
   
இந்நிலையில், மாணவி ஷோபனாவை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவரின் திறமையை ஊக்குவிக்கும் வகையில்  நிதி உதவி அளித்து பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து மாணவி சோபனா கூறுகையில்,  'கரூர் மாவட்டத்தில் கடைகோடியில் உள்ள மிக சிறிய கிராமமான செம்பகனம் கிராமத்திலிருந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது சந்தோஷமாக உள்ளது. பள்ளி அளவில், ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளேன்.

இந்த வெற்றிக்காக சென்னையில் உள்ள பல அறிவியல் ஆய்வு நிலையங்கள் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் ஆகியவற்றையும் பார்வையிட அழைத்துச் சென்றார்கள். அங்கு நடைபெற்ற  போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்", என கூறினார். 

மேலும், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் அடுத்த மாதம் சென்று பார்வையிட உள்ளதாகவும், அது தன்னை ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளராக உருவாக  உந்து சக்தியை தன்னுள்  ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பள்ளியின் அறிவியல் ஆசிரியர் கருணாநிதி அவர்கள்,  "காற்றின் அழுத்தம் மற்றும் நீர் அலாரம்" செய்வதற்கு எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் என்றும்,

இதையும்  படிக்க   }  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வலியுறுத்தி........ 500க்கும் மேற்பட்டோர் மனு...!

மேலும் மேல்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கும், அறிவியல் கண்டுபிடிப்புகளை மேலும் கண்டு பிடிப்பதற்காக ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும்  படிக்க   }  12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!