20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு...

தமிழகத்தில் மேலும் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு  அதிரடி உத்தரவு...

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாகை ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநராகவும்.,விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை, வேளாண்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் திருப்பத்தூர் ஆட்சியராக இருந்த சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும் கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன், நில நிர்வாக ஆணையராகவும்,வேலூர் ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி சுற்றுலாத்துறை இயக்குநராகவும்.,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையராக எம்.வள்ளலார் ஐ.ஏ.எஸும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக லட்சுமி பிரியாவும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதா ஐ.ஏ.எஸும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்.,அரியலூர் ஆட்சியராக பணியாற்றி ரத்னா ஐ.ஏ.எஸ் சமூக நலத்துறை இயக்குநராகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராவ், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராகவும், சமக்ரா ஷிக்ஷாவின் மாநில திட்ட இயக்குநராக சுதன் ஐ.ஏ.எஸும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநராக சரவணவேல்ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி ஐ.ஏ.எஸும், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ராவும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய் ஐ.ஏ.எஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக அமுதவல்லி ஐ.ஏ.எஸும் தமிழ்நாடு குடிநிர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குநராக தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்ற வாரிய மேலாண் இயக்குநராக விஜயராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.