அழகு கலை பயிற்சி பள்ளியின் பட்டமளிப்பு விழா - ராம்ப்வாக் செய்து அசத்திய பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள்

திருச்சியில் அழகு கலைப் பயிற்சி பள்ளியின் பட்டமளிப்பு விழாவில், பயிற்சி முடித்த 30க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. 

அழகு கலை பயிற்சி பள்ளியின் பட்டமளிப்பு விழா - ராம்ப்வாக் செய்து அசத்திய பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள்

திருச்சி மாவட்டம் ராமலிங்க நகரில், லிம்ராஸ் அகாடமி அழகுக் கலைப் பயிற்சி இன்ஸ்டியூட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 27-வது  பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அழகுக் கலை பயிற்சி பள்ளியின் நிறுவனர் பர்சானா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த 30 பேர் அழகுக் கலை, சிகை  அலங்காரம் போன்றவற்றிற்கு பட்டம் பெற்றனர்.

இதில் ரோட்டரி சங்கம் உதவியுடன், 3 திருநங்கைகள் பயிற்சி பெற்று பட்டம் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, ராம்ப்வாக் எனப்படும் பேஷன் ஷோ நடைபெற்றது. இதில், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் கலந்து கொண்டு, ஆடை, ஆபரணங்கள் அணிந்து, ராம்ப்வாக் செய்து பார்வையாளர்களை அசத்தினர்.