3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்...! ஒருவர் கைது...!

சாத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்...! ஒருவர் கைது...!
Published on
Updated on
1 min read
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  தோட்டிலோவன்பட்டியில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சென்று கொண்டியிருந்த காரை நிறுத்திய போது கார் காவல்துறையினர் மீது மோதுவது போல் சென்று நிற்காமல் சென்று உள்ளது. இதனை கண்ட மற்ற காவலர்கள் நிறுத்தாமல் சென்ற காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 
அப்போது காரில் 14 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை காரில்  கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த காரையும், காரில் இருந்த இளைஞரையும் போலீசார், தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட  இளைஞர், நாகர்கோவில் அருகே உள்ள மரிச்சென்விளை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (27) என்பது தெரிய வந்தது. மேலும் சந்தோஷ் மீது குட்கா கடத்தியதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் காரில் குட்கா கடத்தியதாக கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com