ஹேக்கர்களுக்கு அடிச்சது பம்பர் பிரைஸ்!!!சென்னை காவல் துறை அறிவிப்பு...

ஹேக்கர்களுக்கு அடிச்சது பம்பர் பிரைஸ்!!!சென்னை காவல் துறை அறிவிப்பு...

குற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் சிசிடிவி காட்சிகளின் பங்கு அதிகரித்து வரும் நிலையில் அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய  எட்டு தலைப்புகளின் கீழ் சென்னை காவல் துறை போட்டி அறிவித்துள்ளது.போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களை பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பங்கு வகிப்பது சிசிடிவி காட்சிகள் ,அவ்வாறு கிடைக்க பெறும் சிசிடிவி காட்சிகளில் பல நேரங்களில் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக போதிய ஆதாரமில்லாமல் குற்றவாளிகள் தப்பித்து வரும் சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள | குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம் ?

ஹேக்கர்களுக்கு  போட்டி :

இந்த குறைபாடுகளை சரிசெய்யும் நோக்கில் சென்னை காவல்துறை "ஹேக்கர்கள் "என்று சொல்லப்படும் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் எட்டு தலைப்புகளின் கீழ் தற்போது காவல்துறை சந்தித்து வரும் குறைபாடுகளுக்கு வல்லுநர்கள் தீர்வு காண வேண்டும்.

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள இந்த போட்டியில்  மூன்று பேர் கொண்ட குழுவாக பங்கு பெறலாம்.
போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் வருகின்ற முப்பதாம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முதல் கட்ட போட்டி டிசம்பர் மூன்றாம் தேதியும், இரண்டாம் கட்ட நேரடி போட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எந்த மாதிரியான போட்டி ;1லட்சம் பரிசு :

1) வாகனங்களில் சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யும் வாகனங்கள் பல நேரங்களில் மங்கலாக தெரிவதால் இந்த நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக சிசிடிவி காட்சியிலிருந்து எடுத்துக் கொடுக்கும் வகையில் ஒரு போட்டி, 


2) சிசிடிவி காட்சிகளில்  பதிவாகும் குற்றவாளிகளின் முகம் தெளிவாக மாற்றிக் கொடுக்கும் வகையில் ஒரு போட்டி,

3)இரவு நேரங்களில் அதிக வெளிச்சத்துடன் வரும் வாகனங்களால் சிசிடிவி காட்சியில் நம்பர் பிளேட்டுகள் தெளிவாக தெரிவதில்லை, இரவு நேரங்களிலும் நம்பர் பிளேட்டுகளை தெளிவாக தெரியும் வகையில் மாற்றி கொடுக்கும் வகையில் ஒரு போட்டி

என எட்டு தலைப்புகளின் கீழ் இந்த போட்டி நடைபெற உள்ளது.போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.