சூறாவளி காற்றுடன் பலத்த மழை.. மரம் சாய்ந்து இரண்டு மூதாட்டிகள் பலி!!

மரம் விழுந்தும் மாட்டு கொட்டகை சரிந்தும் இரு மூதாட்டிகள் பலியானார்கள்.
சூறாவளி காற்றுடன் பலத்த மழை.. மரம் சாய்ந்து இரண்டு மூதாட்டிகள் பலி!!
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்தநிலையில், மரம் விழுந்தும் மாட்டு கொட்டகை சரிந்தும் இரு மூதாட்டிகள் பலியானார்கள்.

ஈரோடு மேல் திண்டல் கார்கில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவருடைய மனைவி சரஸ்வதி.. 

சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்த போது சாஸ்வதி அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மழை அதிகமாக வந்ததால் அவர் ஒரு மரத்தடியில் ஒதுங்கி உள்ளார்.

அப்போது பலத்த காற்றின் காரணமாக மரம் சாய்ந்து சரஸ்வதியின் மீது விழுந்தது. இதில் சரஸ்வதி சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்தசம்பவம் தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் விரைந்து சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் சித்தோடு அருகில் மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து கொண்டிருந்த துளசியம்மாள் வயது( 65 ) மூதாட்டி மீது மாட்டுக்கொட்டகை சரிந்து விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com