தமிழக - கேரள எல்லை பகுதியில் தொடரும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு...

கேரளாவில் கனமழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள ஆரியங்காவு பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது.
தமிழக - கேரள எல்லை பகுதியில் தொடரும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு...
Published on
Updated on
1 min read

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்த தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா மாநிலங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி, தமிழக - கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு - தென்மலை பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்துள்ளது.

சாலைகளே தெரியாத அளவுக்கு கரைபுரண்டு ஓடும் வெள்ளம், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் தங்க இடமின்றி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, பெரும்பாலான வாகனங்களும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com