திமுக அரசை வீழ்த்த எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் வீரசபதம்...ஈபிஎஸ் அறிக்கை!

திமுக அரசை வீழ்த்த எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் வீரசபதம்...ஈபிஎஸ் அறிக்கை!

திமுகவை வீழ்த்தி மீண்டும் அதிமுகவை ஆட்சியமைக்க அனைவரும் எம்ஜிஆரின் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் அறிக்கை :

திமுக அரசை வீழ்த்தி அதிமுகவை ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சி தலைவர் எம்ஜிஆர், அவரது வாழ்நாளை ஏழை எளிய மக்களுக்காகவே அற்பணித்த மாமனிதர் என குறிப்பிட்டுள்ளார்.

உறுதிமொழி ஏற்க வேண்டும் :

ஆனால் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை குடும்ப அரசியல் மூலம் கூறு போட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தகைய நிலைமையை மாற்றியமைக்க திமுகவை வீழ்த்தி மீண்டும் அதிமுகவை ஆட்சியமைக்க அனைவரும் எம்ஜிஆரின் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்க வேண்டுமென தொண்டர்களுக்கு அறிக்கை மூலம் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.