10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை..!

19-ம் தேதி நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைப்பு..!

10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை..!

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நேரடி வகுப்புகள் நடத்தப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்த போது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதுமட்டுமின்றி ஜனவரி 19-ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.