கரூர் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை...
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு.

கோயில் இடிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு அமைச்சர்கள் பேசியவற்றை தடயவியல் ஆய்வு செய்து, அது உண்மையில்லை என நிரூபணம் ஆனால் அரசியலைவிட்டு விலக தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
அண்ணாமலை சவால் :
கோவை ஈச்சனாரியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அமைச்சர் கே.என்.நேரு மற்றும் டி.ஆர்.பாலு பேசியவற்றை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் எனவும், நிரூபிக்கவில்லை எனில் முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எடிட் செய்து வெளியிட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கும் நிலையில் அவர் சொல்லும் இடத்தில் வீடியோவை தரத் தயார் எனவும், அதனை முதலமைச்சர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தலாம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிக்க : 30 நிமிடங்கள்...தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...!
அதனை தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி குறித்த பிசிசி ஆவணப்படத்தில் உண்மை இல்லை எனவும், அதனை தாரளமாக திரையிடலாம் என கூறினார். மேலும் ஆவணப்படத்தை மறைக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என தெரிவித்த அவர் அதைப் பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.
இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் தான் எங்களின் இலக்கு எனவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.
தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் :
தென் கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளதைக் குறிக்கும் வகையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 30 நிமிடங்கள்...தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...!
தொடர்ந்து, புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீண்டும் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொது செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், அந்த சமயம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற நிலையில், 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேல்முறையீடு :
இதையடுத்து, தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
மனுத்தாக்கல் :
இந்நிலையில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல் முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தள்ளுபடி செய்து உத்தரவு :
இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, பதிவுத்துறையில் சரி பார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கேவியட் மனுதாக்கல் :
இந்நிலையில், சசிகலாவுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அவர்கள் நாடலாம் என்ற பட்சத்தில் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று சசிகலா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிக்க : ஈரோட்டில் கணக்கில் வராத ரூ 4 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல்...
இதற்காக, "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதனை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றாம் தேதி காலை சென்னையிலிருந்து வேலூருக்கு ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.
கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
கோரிக்கை :
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 24 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சேட்டு, “மக்களின் நேரடிக்குறைகளை சரி செய்யும் பணியில் ஈடுபடும் கவுன்சிலர்களுக்கு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது போல ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், அமர்வுபடியாக 800 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது” என மாமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பதில் :
இதுகுறித்து பேசிய மேயர் பிரியா, கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : பிப்ரவரி 1க்கு முன்னதாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம்...!
தமிழ்த்தாய் வாழ்த்து :
இதைத்தொடர்ந்து பேசிய மதிமுக மாமன்ற உறுப்பினர் ஜீவன், “ மாமன்ற கூட்டத்தை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். ஒவ்வொரு வார்டு அலுவலகத்திலும் வார்டு உறுப்பினர் தேசியக்கொடி ஏற்றும் வகையில் கொடிக்கம்பம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “அடுத்த மாதம் முதல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் தொடங்கும்” என்று கூறினார்.