மனைவியின் பிரிவை தாங்கா முடியாத கணவன்...விரக்தியில் விஷம் அருந்திய சோகம்!

மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஆலங்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் பிரிவை தாங்கா முடியாத கணவன்...விரக்தியில் விஷம் அருந்திய சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாப்பன்மனையை சேர்ந்தவர் இளமுருகன் - ராதா தம்பதி. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

சுமூகமாக சென்றுக்கொண்டிருந்த இந்த தம்பதி வாழ்க்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புயல் காற்றூ வீசுவது போல் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனைவி ராதா கணவனிடம் கோபித்து கொண்டு தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மனைவியின் பிரிவை தாங்காத இளமுருகன் தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு அழைத்துள்ளார். ஆனால் ராதா நான் வரவில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. 
மனைவி தனது முடிவில் உறுதியாக இருப்பதால் வாழ்வில் விரக்தி அடைந்த இளமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.