கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கணவன் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை...

செங்குன்றத்தில் கர்ப்பிணி மனைவியை தாக்கியதால்  மன உளைச்சலுக்கு ஆளான கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கணவன் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை...
Published on
Updated on
1 min read

செங்குன்றம் எம்.கே காந்தி தெருவில் வசிக்கும் 27வயதான பாபு என்பவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி எல்லம்மாள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இவர் வீட்டின் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம்  கனவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த பாபு தீடீரென  மனைவியின் வயிற்றில் தாக்கியதில் வயிறு வலியால் துடித்த அவரைஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நடந்த சம்பவத்தை தினமும்  நினைத்து நினைத்து மன உளைச்சலுக்கு ஆளான பாபு  தீடீரென வீட்டிலுள்ள படுக்கை அறைக்கு சென்று  மனைவியின் புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் செங்குன்றம் போலீசாருக்கு தெரியப்படுத்தியதின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார்  இறந்த பாபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com