நான் மட்டுமே எல்லா பக்கத்திலும் சண்டை செய்ய முடியாது  -சீமான்...!!

நான் மட்டுமே எல்லா பக்கத்திலும் சண்டை செய்ய முடியாது  -சீமான்...!!

நான் மட்டுமே எல்லா பக்கத்திலும் இருந்து சண்டை செய்ய முடியாது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். 

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக நிகழ்விடத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விஜய் மக்கள் இயக்கத்தின்  பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கை கொடுத்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீமான் அவருக்கு பத்திரிக்கை துறை மட்டும் இல்லாமல் விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் அதிகம் என்றும் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி பெருமை அவரை சாரும் என்றும்  அனைவரையும் நேசித்த பெருமகன் என்றும் அவருடைய நினைவை போற்றுவதில் பெருமை அடைகிறோம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்து கொள்வதாகவும் விஜய் அரசியல் கட்சி தொடங்கவே இதை செய்கிறாரா எனவும் செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த சீமான், விஜய் அரசியல் கட்சி தொடங்கவே இது போன்ற முயற்சிகளை செய்து வருகிறார் அதை நான் வரவேற்கிறேன் என்று கூறிய அவர் விஜய் அரசியலுக்கு வந்தால் இந்த மண் வலிமையாக இருக்கும் என்றும் கூறினார். தொடர்ந்து, "நான் மட்டுமே எல்லா பக்கத்திலும் இருந்து சண்டை செய்ய முடியாது. அவர்  வந்தால் ஆதரவாக இருக்கும்" என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டுமே தவிர நான் அவரை ஆதரிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

மேலும் பேசிய சீமான், தமிழ்நாடு தமிழர்களுக்கு சுடுகாடாக மாறி வருவதாகவும் தனது சொத்துக்களை ஏழைகளுக்கு கொடுத்த முத்துராமலிங்க தேவர் போராளியா? இல்லை தனது சொத்துக்களை பாதுகாக்க திருமணம் செய்த பெரியார் போராளியா?  என்று கேள்வி எழுப்பிய அவர் "சீமான், சங் பரிவாரங்களின் குரலாக ஒலிக்கிறார்" என்ற திருமாவளவனின் கேள்விக்கு அவர் தனது "நன்றி"யை பதிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிச் சென்றார்.