நிதானம் தவறி பேசுபவர்களுக்கு...பதிலளிக்க விரும்பவில்லை...டிடிவி அதிரடி!

நிதானம் தவறி பேசுபவர்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என செய்தியாளர்கள் பேட்டியில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நோக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படிக்க: கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு...அமைச்சர் சொன்ன நீயூஸ்!!
பதிலளிக்க விரும்பவில்லை:
அப்போது அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக உங்களை விமர்சிக்க கூடிய நிலையில் இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி, அரசியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்வதை தாண்டி, நிதானம் தவறி பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அம்மாவின் கொள்கையை பின்பற்றுவது தான் எங்கள் நோக்கம் என்றார்.
நியாயமான கோரிக்கை:
தொடர்ந்து பேசிய அவர், எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் வாருங்கள் என்கிறேன். இரட்டை இலையும் கட்சியும் இருப்பதால் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்ற நியாயமான எனது கோரிக்கையை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம் என்று ஈபிஎஸை டிடிவி தினகரன் சாடி பேசினார்.
காங்கேயத்தில் ஏழாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், பகவதிபாளையம் பிரிவில் வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க பாசன விவசாயிகள் தொடர் பட்டினி போராட்டத்தில் கடந்த 22ம் தேதி முதல் ஈடுபட்டு வந்தனர். இதில் 60 பெண்கள் 90 ஆண்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்பினர் கட்சி நிர்வாகிகள் விவாத சங்கத்தினர் நேரில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காங்கேயம், வெள்ளகோயில் பகுதிகளில் வணிக நிறுவனங்கள் உணவகங்கள் பேக்கரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட கடைகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்திற்க ஆதரவு தெரிவிக்க வந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முத்து ரோடு பிரிவு என்று கூறப்படும் கோவை, கரூர், தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடங்களாக இந்த சாலை மறியல் போராட்டம் நீடிதது.
"பரப்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் சமச்சீர் பாசனம் மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டும். வழி நெடுகிலும் உள்ள தண்ணீர் திருட்டை தடுத்து சுற்றுகளை அதிகப்படுத்த வேண்டும்" உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில் உயர் நீதிமன்றத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி பெற்று கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது பண மோசடி புகார்!!!
இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கே.பி. முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வை மதிக்கும் வகையில் பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தோம். நேரம் வரும்போது அதிமுக பாஜக கூட்டணி அமையும் என ஒரு சிலர் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக நாடகமாடுகிறது என்று தெரிவித்துள்ளனர். இது அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தின் வெளிப்பாடு என்று நாங்கள் கூறுவோம்.” என்றார்.
அதனைத்தொடர்ந்து, “நாங்கள் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் இருந்து ஒரு போதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம்”, என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுக என்பது மிகப் பெரிய இயக்கம் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த இயக்கம் பல வரலாறுகளைக் கொண்ட இயக்கமாக அதிமுக உள்ளது எனவும், வேறொரு கட்சியில் உள்ள மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று கூறும் அளவிற்கு நாகரிகம் தெரியாதவர்கள் அல்ல அதிமுகவின் தலைவர்கள் என்றும் தெரிவித்தார்.
அண்ணா உருவாக்கிய கொள்கைகளை வேறொரு தலைவர் விமர்சனம் செய்கிறார் அதை பற்றி கவலைப்படாமல் இருக்கும் முதலமைச்சர் கொள்கை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை. இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி இருக்காது”, என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் பாஜக செய்யத் தவறியதை மக்களிடையே நாங்கள் சுட்டிக் காட்டுவோம் என்றும் தெரிவித்தார்.
பாஜக கூட்டணி குறித்து பொதுச்செயலாளரின் உணர்வையே நாங்கள் வெளிப்படுத்தி உள்ளோம் அவர் பேச வேண்டிய நேரம் வரும்போது தன்னுடைய கருத்தை தெரிவிப்பார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவுக்கு வந்து விடுமோ என்று ஸ்டாலின் அஞ்சுகிறார்”. என கூறினார்.
இதையும் படிக்க | "நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும்" -அண்ணாமலை!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் விரைவில் தென்னை நார் தொழிற்சாலை அமைக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெவித்துள்ளார்.
தஞ்சையில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
“பட்டுக்கோட்டையில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். என்னுடைய கோரிக்கையும் அதுதான். தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 4 நிறுவனங்களிடம் பேசி உள்ளோம். இதற்காக நில தேவைகள் அதிகமாக உள்ளது. நில எடுப்பு நடந்து முடிந்த பிறகு விரைவிலே தென்னை சார் தொழிற்சாலை அமைக்கப்படும்.
தஞ்சையில்
ஐ.டி பார்க் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ஐ.டி பார்க்க செயல்பாட்டுக்கு வந்ததும் டெல்டா மாவட்டங்களில் படித்த ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி சார்ந்த வேளாண் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு, குறு தொழில்கள் நலிவடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்க ஏராளமானோர் முன் வருகின்றனர். முதலீடு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் நடக்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
அவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். தமிழ்நாடு மட்டும்தான் சொன்னதை செய்கிறது. ஏற்கனவே தொழில் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருகின்றனர்” என்றார். தொடர்ந்து, தஞ்சையில் அமைக்கப்பட்டு வரும் மினி டைட்டில் பார்க் கட்டிட பணியை ஆய்வு செய்தார்.
அண்ணாமலை பாதயாத்திரை குறித்து கேட்டதற்கு:-
விளையாட்டு செய்திக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல இயலாது என காமெடியாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : ”15வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்” - இராமதாசு!
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும் 4 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
கோவை மத்திய சிறையில், வார்டன்களால் தாக்கப்பட்ட ஏழு கைதிகளுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வழங்க சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அவர்களின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தாய் செங்கையம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், கோவை சிறையில் கைதிகள் - வார்டன்கள் மோதல் குறித்து வெளியான செய்தியை பார்த்து தங்கள் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மானிடம், மகனை சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி தினேஷை சந்தித்த போது, அவர் வார்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டதும், பலத்த காயமடைந்த நிலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாததும் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
தனது மகன் உள்பட ஏழு விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்துள்ள தனது மகனுக்கு உரிய சிகிச்சை வழங்கும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, நான்கு சிறை வார்டன்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிறை கைதிகளே காரணம் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான ஏழு கைதிகளுக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், 7 கைதிகள் மற்றும் 4 வார்டன்களின் மருத்துவ அறிக்கைகளை செப்டம்பர் 29ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத்தரப்பு உத்தரவிட்டு, விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிக்க: இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது பண மோசடி புகார்!!!