நிதானம் தவறி பேசுபவர்களுக்கு...பதிலளிக்க விரும்பவில்லை...டிடிவி அதிரடி!

நிதானம் தவறி பேசுபவர்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என செய்தியாளர்கள் பேட்டியில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்மா பேரவை மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நோக்கிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படிக்க: கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு...அமைச்சர் சொன்ன நீயூஸ்!!
பதிலளிக்க விரும்பவில்லை:
அப்போது அதிமுக தலைவர்கள் தொடர்ச்சியாக உங்களை விமர்சிக்க கூடிய நிலையில் இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி, அரசியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்வதை தாண்டி, நிதானம் தவறி பேசுபவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அம்மாவின் கொள்கையை பின்பற்றுவது தான் எங்கள் நோக்கம் என்றார்.
நியாயமான கோரிக்கை:
தொடர்ந்து பேசிய அவர், எங்கள் பலம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் வாருங்கள் என்கிறேன். இரட்டை இலையும் கட்சியும் இருப்பதால் தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும் என்ற நியாயமான எனது கோரிக்கையை ஏற்பதும், மறுப்பதும் அவர்கள் எண்ணம் என்று ஈபிஎஸை டிடிவி தினகரன் சாடி பேசினார்.
தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்தது தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல். திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சிதம்பரம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து, இந்திய தேசத்தை மட்டும் அல்ல உலகத்தையே உலுக்கி இருக்கிறது. இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்துக்கு ரயில்வே துறையின், ஒன்றிய அரசின் அலட்சியமான போக்குதான் காரணம் என அந்த துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து கூறியிருக்கின்றனர்.
தென்கிழக்கு ரயில்வே மண்டல பொது மேலாளர் அங்குள்ள பிரச்சனைகள் குறித்து ஏற்கெனவே ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாக சொல்கிறார். அகில இந்திய தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் நடவடிக்கை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அது ஆட்சியாளர்களாலும், அமைச்சகத்தாலும் அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த ரயில் விபத்து நிகழ்ந்து இருக்காது. இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் ரயில்வே அமைச்சர் பதவி விலகி முழுமையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மேலும், அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்திருக்கின்ற இந்த கால கட்டத்தில், தற்போது ஏற்பட்டுள்ள விபத்து உலக அரங்கில் நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. மம்தா பானர்ஜி ரயில்வே துறை அமைச்சராக இருந்த காலத்தில் விபத்தை தவிர்க்க பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் இந்த ஆட்சி காலத்தில் 'கவாச்' என்ற பெயரில் அழைக்கிறார்கள். ஆனால் அந்த திட்டத்தை கூட இவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. ரயில்வே பாதுகாப்புக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்பது தெரிகிறது என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, இந்து ராஷ்டிரம் அமைப்போம் என்பவர்களுக்கும், இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் வெளிப்படையாக அச்சுறுத்துபவர்களுக்கும் அமைச்சர் பதவி தருகிறார் மோடி. மத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் அளிக்கின்ற முக்கியத்துவம். வெறுப்பு அரசியலுக்கு தருகின்ற முக்கியத்துவம் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அளிப்பதில்லை என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விபத்து குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை பிரதமர் வெளியிட வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தண்டிப்பதற்காக சிறப்பு புலனாய்வு விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க:கீழ்பவானி வாய்க்காலை மண்ணால் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 17 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட 131 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். மேலும், கூடுதலாக 2-வது சிறப்பு ரயில் மூலம் 17 பேர் மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக பயணிகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு காவல்துறையும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தனர். சாய்வு நாற்காலி, முதலுதவி பெட்டி, மருந்து பொருட்கள் ஆகியவற்றுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்கும் பணியில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.
இதையும் படிக்க : பள்ளிக்கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குனர் நியமினம்...2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு செய்த மாற்றம்!
பிற்பகல் 12 .45 மணி அளவில் சிறப்பு ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை ஒன்றிற்கு வந்தடைந்தது. அப்போது, பயணிகளின் உறவினர்கள் நண்பர்கள் அவர்களை வரவேற்று உரிய இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி பத்திரமாக ஊர் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்பத்தூர்: ஆன்லைன் வேலை வாங்கி தருவதாக கூறியவரிடம் 13 லட்சத்தை இழந்துள்ளார் கோயம்புத்தூரை சேர்ந்த நபர்.
கோயம்பத்தூர், உப்பிலிபாளையத்தை சேர்ந்த டொமினிக் சேவியோ என்னும் வாலிபர், தனது தொலைபேசியில் அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து, வாட்ஸாப் மூலம் ஒரு குறுஞ்செய்தி பெற்றார். அதில், ஆன்லைன் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக குறிப்பிட்டிருந்தது.
இந்த குறுஞ்செய்தியை நம்பிய டொமினிக், அடையாளம் தெரியாத அந்நபரை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். முதலில், ஒரு சில சிறிய பணிகளை ஆன்லைன் மூலம் முடிக்குமாறு கூறியுள்ளார்.
அதன் பின்னர், அதிக வருவாய் ஈட்ட வேண்டுமெனில், முதலீடு செய்ய வேண்டுமென, அந்நபர் டொமினிக்கிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறியபடியே, ரூ 12.98 லட்சத்தை பல தவணைகளில் செலுத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில், அந்நபர் மீது டொமினிக்குக்கு சந்தேகம் வரவே, அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். பின்னர் சைபர் க்ரைம் போலீசாரிடம் அந்நபர் மீது புகார் அளித்தார். டொமினிக்கின் புகாரை பெற்றுக்கொண்டு, சைபர் க்ரைம் போலீசார், மோசடி செய்த நபர் மீது பிரிவு 420 மற்றும் 66Dன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கல்வித் துறைக்கு இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே பள்ளிக்கல்வி துறையில் முழு அதிகாரங்களைக் கொண்ட ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. இதன் மூலம், 150 ஆண்டுகளாக இயக்குனர் பதவியில் இருந்த அதிகாரம் ஆணையருக்கு மாறியது. இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் இடையேயும், ஆசிரியர் சங்கங்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : ”நாட்டிலேயே கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருகிறது” - ஆளுநர் பெருமிதம்!
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் பதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனராக இருந்த மு.கண்ணப்பன், தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா இரயில் விபத்தில் தகவல் கிடைக்காத 6 பேர் பற்றி ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சமூக பொறுப்பு நிதி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியது.
இந்த நிகழ்வில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறந்த எடுத்துக்காட்டாக மஞ்சப்பை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் பங்களிப்போடு 10 ஆயிரம் மரங்களை சென்னை முழுவதும் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இது போன்ற திட்டங்களை அரசு மட்டும் செயல்படுத்தினால் போதாது, மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
ஒடிசா ரயில் விபத்தில் தகவல் கிடைக்காத எட்டு தமிழர்கள் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அவர், நேற்று ஒடிசாவில் இருந்து கிளம்பும்போது எந்த தெளிவும் இல்லாமல் இருந்ததாகவும், இங்கே வந்து அரசு அதிகாரிகளிடம் பேசும் பொழுது அந்த 8 பேரும் பாதுகாப்பாக இருந்ததை அறிந்துகொண்தாக கூறினார். மேலும் அதில் 2 பேரிடம் பேசி விட்டதாகவும், மற்ற ஆறு பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்று உடன் பயணித்தவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவத்துள்ளார். தொடர்ந்து மீதமுள்ள 6 பேரிடம் தெளிவாக பேச முடியவில்லை என்பதால் ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிக்க:"இஸ்லாமியர்களின் உணர்வுப் பூர்வ தோழன் அதிமுக" ஜெயக்குமார் உருக்கம்!