இதை செய்யாவிட்டால் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து எங்கள் போராட்டம் தொடரும்.! திருமாவளவன் எச்சரிக்கை.! 

இதை செய்யாவிட்டால் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து எங்கள் போராட்டம் தொடரும்.! திருமாவளவன் எச்சரிக்கை.! 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் ; இல்லையென்றால் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் தொடரும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்தார்

சென்னை ஈவேரா சாலையில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் எதிரே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக மூன்றாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உற்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த  திருமாவளவன், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ஆர்பாட்டம் நடத்தி வருகிறோம். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பததே எங்களது முதல் கோரிக்கை எனவும் கூறினார்.  

மேலும், கொரோனா நிவார நிதியுதவியாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 7500 வழங்க வேண்டும் எனவும், இதற்காக ஒன்றிய அரசு அதற்கான போதிய நிவாரண நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

அதோடு, தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டாமல் போதிய தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்றும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திற்கு உடனடியாக ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தவறான பொருளாதார கொள்கையாலும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு பொதுமக்களை பாழுங்கிணற்றில் தள்ளியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.