முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை... முக்கிய ஆவணங்கள் சிக்கியது...
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு.

வணிகவரித்துறையின் கடந்த நிதி ஆண்டு மொத்த வரி வசூலை ஜனவரி மாதத்திலேயே கடந்து வணிக வரித்துறை சாதனை.. அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு
மேலும் படிக்க| ஒரே வேட்பாளர்... அதுதான் பாஜாகவின் நிலைப்பாடு
வணிகவரித்துறையில் கடந்த நிதி ஆண்டில் மொத்தம் ரூபாய் 1,04,970.08 கோடி வரி வருவாய் ஈட்டப்பட்டது. தற்போது நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாத முடிவில் வணிகவரித்துறையின் வரிவருவாய் ரூபாய் 1,06,918 கோடி.
இவ்வகையில் கடந்த நிதி ஆண்டின் மொத்த வரி வசூலை நடப்பு ஜனவரி மாத முடிவிலேயே கடந்து பத்திரப்பதிவு துறையைப் போலவே வணிகவரித்துறையும் சாதனை படைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு மூர்த்தி பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மனுத்தாக்கல்:
மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பதில் மனு:
இதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், கடலோர ஒழுங்குமுறை மண்டல இரண்டு விதிகளின் படி கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்:
கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அண்ணா நினைவிடத்திற்குள் தான் கலைஞரின் நினைவிடமும் அமைந்துள்ளதால் அதில் எந்த விதிமீறலும் இல்லை என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
நினைவிடம் அமைக்க பொதுமக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும்
கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் கட்டப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: பள்ளிச்சீருடையில் சிறுபிள்ளைகளைப் போல தி.மு.க. உறுப்பினர்கள்....எதற்காக?!!
பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். மற்றும் சசிகலா அணியினர் தனித்தனியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஈபிஎஸ் அணியினர் அஞ்சலி :
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் ஜெயக்குமார் பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது பேசிய பொன்னையன், இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கும் என்று கூறினார்.
ஓபிஎஸ் அணியினர் அஞ்சலி :
அவரை தொடர்ந்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அ.தி.மு.க. வழக்கு முடியட்டும் அப்போது செல்கிறேன் என்று கூறினார்.
இதையும் படிக்க : ஒரே வேட்பாளர்...அதுதான் பாஜாகவின் நிலைப்பாடு...!
சசிகலா அஞ்சலி :
இவரைத் தொடர்ந்து, வி.கே.சசிகலா, அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, உறுதி மொழி ஏற்றார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எனும் தீய சக்தியை ஒழிக்க அதிமுக ஒன்றிணைவது அவசியம் என்றும், அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியின் அருகில் நெருங்கி விட்டோம் என்றும் கூறினார்.
டிடிவி தினகரன் அஞ்சலி :
இதேபோன்று அண்ணா நினைவு தினத்தை ஒட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க.வின் ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க. ஓரணியில் இணைய வேண்டும் என்றார்.
தனி தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை... நான் எப்போதும் சொல்வது எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் ; அதிமுகவை ஒருங்கிணைப்பதில் பக்கத்தில் நெருங்கி விட்டோம்
பேரறிஞர் அண்ணா நினைவுநாள்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் வி.கே.சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரையும் சமாதானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, என்னை பொறுத்தவரை திமுக, கருணாநிதி, தீய சக்தி என்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் என இரண்டு தலைவர்களும் சொன்னதை நாம் மனதில் வைத்து நம்மளுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன், நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற வார்த்தையை தான் இப்பவும் சொல்கிறேன் எப்பொழுதும் சொல்கிறேன் என்றார்.
அதிமுக ஒன்றிணைவதற்கு நெருங்கிவிட்டோம்
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஒன்றிணைவதற்கு மிக பக்கத்தில் நெருங்கி விட்டோம் எனவும் தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது தான் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை சொல்லுவது என்ற அவர், ஒன்றிணையும் சூழ்நிலை வந்துவிட்டது என்பது எனக்கு தெரிகிறது, உங்களுக்கு தெரியவில்லை எனக்கு தெரிகிறது என தெரிவித்தார். இடைத்தேர்தலில் உங்களுடைய நிலைபாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் தன்னுடைய நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
பாஜக தலைவரை இரு அணியினரும் தனித்தனியாக சென்று பார்ப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக என்பது என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது.கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு, பேனா நினைவுச்சின்னம் வைப்பதை நான் எதிர்க்க தான் செய்கிறேன், அதற்கு காரணம் கடலுக்குள் நினைவு சின்னம் வைப்பது நல்லது அல்ல, மீனவர்களை பாதிக்கும், காவல்துறைக்கு சவலாக இருக்கும் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திகிறேன். அப்படி நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் கருணாநிதியின் சமாதியில் நினைவு சின்னத்தை வைக்கலாம் என்றார்.
பா.ஜ.க. மீது அதிரடி கருத்து தெரிவித்த இபிஎஸ் தரப்பின் சி.பொன்னையன்
இத்தனை அடி உயரத்தில் தான் வைக்க வேண்டும் என்பது கணக்கில்லை, தமிழ்நாட்டின் நிதி நிலையை பார்க்க வேண்டும் அதற்கு ஏற்றார்போல் தான் திட்டங்களை செய்ய வேண்டும். மக்களுக்கு பயன்படும் திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைக்கிறார்கள் கேட்டால் நிதி இல்லை அதற்கு ஏற்றார்போல்தான் திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் கேட்டால் அதற்கு நீதி இல்லை என்று கூறுகிறார்கள், ஆனால் வேண்டாம் என்று சின்னம் வைக்க மட்டும் அரசியல் நிதி எப்படி வந்தது? என கேள்வி எழுப்பினார்.
இருதியாக அதிமுகவின் இரு அணிகள் ஒன்று சேருமா என்ற கேள்விக்கு, எல்லோரும் ஒன்றினையும் நேரம் வந்து விட்டது என்றார்.
ஒருகூட்டுக் கிளியாக ஒரு தோப்புக் குயிலாக பாடு.. என அ.தி.மு.க.வும் பா.ஜ.கவும் ஆனந்தக்களிப்பில் துள்ளித்திரிந்தது பழைய காலம் என்று கூறத்தக்க அளவுக்கு சமீபமாக பாஜக குறித்து அதிமுகவின் முன்னணி தலைவர்கள் உதிர்க்கும் கருத்துக்கள் பகீர் ரகமாக இருக்கிறது.
அந்தரத்தில் மிதக்கும் பாஜக:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர் செல்வம் சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.க. வின் நிலைப்பாடு அந்தரத்தில் மிதக்கிறது.
திட்டவட்ட அறிவிப்பு:
பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்கி விடுவோம் என ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம் பாஜக களமிறங்கினாலும் எங்கள் வேட்பாளரை திரும்ப பெற மாட்டோம் என அதிமுகவின் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வட இந்தியாவில்..:
இதன் உச்சக்கட்டமாக பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகியான பொன்னையன், பா.ஜ.க. வடஇந்தியாவில் கூட்டணிக் கட்சிகளை எவ்வாறு வீழ்த்தி ஆட்சிக்கு வந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தி திணிப்பு:
பொன்னையன் இப்படி கூறினால், கடந்த வாரம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ஜ.க.வில் இருந்து வருபவர்கள் இந்தியை திணிக்கப் பார்க்கிறார்கள் என கூறி அதிர்வலையை கிளப்பியிருந்தார்.
இருட்டடிப்பு செய்யப்பட்ட அண்ணாமலை:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்காக திறக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் பாஜகவின் பெயர், அண்ணாமலையின் புகைப்படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், சி.வி.சண்முகம், பொன்னையன் போன்றவர்களின் பேச்சுக்கள், கூட்டணிக்குள் குழப்பமா என்ற கேள்வியை நாட்டு மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அதானியின் வழக்கை விசாரிக்கும் அதானியின் கூட்டாளிகள்.....மொய்த்ரா கூறுவதென்ன?!!!