முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை... முக்கிய ஆவணங்கள் சிக்கியது...
முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது, அதிக அளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 10-க்கும் மேற்பட் கனரக லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தமிழகத்திலிருந்து கனிம வளங்களை அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக லாரிகளில் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது இதையடுத்து குமரி மற்றும் தென்காசி மாவட்ட சோதனை சாவடிகளில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து இன்று காலை ராதாபுரம் வருவாய் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 11 லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் 11 லாரிகளையும் மடக்கி பிடித்து பறிமுதல் செய்து பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க | தென்காசியில் டன் கணக்கில் கொட்டப்படும் கேரள கழிவுகள்...! சுற்றுசூழல் ஆர்வலர்கள் காட்டம் ...!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தடைசெய்யப்பட்ட கேரள கழிவுகளை கொண்டு வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக இருப்பவர் கங்காதரன். இவர் நெட்டூரில் பணி முடித்து ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோவில் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவு , ப்ளாஸ்டிக், தெர்மகோல் கழிவு உட்பட சுற்றுசூழலுக்கு கேடுகளை விளைவிக்கும் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆலங்குளம் போலீசிற்கு தகவல் அளித்தார். ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ஜோசன்ராஜ், இடைத்தரகர் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக ஆலங்குளம் பகுதியில் சமீப காலமாக கேரளா கழிவுகள் டன் கணக்கில் கொட்டப்படுவதாகவும், இதனால் சுற்றுசூழல் பாதிப்படைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிக்க | மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை சொத்தையான காரணங்களை குறிப்பிட்டு ரத்துசெய்வதா ? - கே.பாலகிருஷ்ணன்.
" மாநில நிர்வாகத்தினை கிள்ளுக்கீரையாக கருதும் அதிகாரக் குவிப்பு"
புகழ்மிக்க மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை சொத்தையான காரணங்களை குறிப்பிட்டு ரத்துசெய்வதா?. உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம்:..
மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சி.பி.ஐ.எம். கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: .....
தமிழ் நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. மாணவர் சேர்க்கையும் இதனால் தடைபட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும்.
இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள தமிழ்நாடு, மருத்துவ சேவையிலும், மருத்துவக் கல்வியிலும் சிறந்து விளங்குகிறது.
" இந்த நிலையில், சென்னையில் செயல்படும் புகழ்பெற்ற ஸ்டான்லின் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ. பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவைகளில் - வருகைப் பதிவினை ஆதாருடன் இணைக்கவில்லை, சி.சி.டி.வி காட்சிகளை இணையம் வழியாக பார்க்க முடியவில்லை என்ற காரணங்களை சொல்லி அங்கீகாரம் ரத்து செய்வதாக தேசிய மருத்துவ ஆணையம் சொல்கிறது. மாணவர் சேர்க்கையும் தடைபட்டுள்ளது. இந்த முயற்சி தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பை அவமதிக்கும் செயல் என்பதுடன், மாநில நிர்வாகத்தினை கிள்ளுக்கீரையாக கருதும் அதிகாரக் குவிப்பு போக்கும் அதில் வெளிப்படுகிறது ".
இதையும் படிக்க | புதிய நாடாளுமன்றம்: மல்யுத்த வீரர்களுக்கு நடந்த அநீதிக்கு தலைவர்கள் கண்டனம்...!
" அங்கீகாரம் ரத்து பற்றிய தனது அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாநில அரசாங்கத்தின் பதில்களை ஏற்பதுடன் – கண்காணிப்பு நடவடிக்கைகளை மத்தியப்படுத்தும் அவசியமற்ற, சாத்தியமற்ற முயற்சிகளை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும் சி.பி.ஐ(எம்) சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் " .
இதையும் படிக்க | அமைதிப் பேரணி - மல்யுத்த வீரர்கள் வலுக்கட்டாயமாக கைது...!
அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும்.இந்த நாட்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக காணப்படும். குறிப்பாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பத்தின் உச்சத்தை தொடும்.
அந்த வகையில் இந்தாண்டு மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் மக்களை வாட்டி எடுத்தது. குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 105 டிகிரியை தாண்டி பதிவாகி காணப்பட்டது.
இதையும் படிக்க | நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி - எஃப் 12 ராக்கெட்....!
இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது . அக்னி நட்சத்திரம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. கோடை மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
கடந்த 25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.
இதையும் படிக்க | கொட்டித் தீர்த்த கனமழை ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்து தமிழ் மரபுகளை கடைப்பிடிப்பதாக பிரதமர் மோடி சொல்வது விளம்பரத்திற்காக மட்டுமே; உண்மையில் அல்ல என காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,....
" நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடம் திறக்கப்படுகிறது; ஆனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான எதிர்கட்சிகள் அதை புறக்கணித்துள்ளனர். தேசத்தில் நடைபெறும் ஒரு மாபெரும் நிகழ்வை புறக்கணிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல எனவும், தேசத்தை உருவாக்கிய சிற்பிகளில் நாங்களும் ஒருவர் என்றும், காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, பொதுவுடமை கட்சிகள்; பல்வேறு மாநில கட்சிகள்; திராவிட கட்சிகள்; எல்லாரும் இந்த நாட்டினுடைய சுதந்திரத்திற்காக போராடியுள்ளனர்," எனது தெரிவித்தார்.
மேலும், 70 ஆண்டுகளாக சில மரபுகளை பின்பற்றி வருகிறோம். பாராளுமன்ற குழு நடைபெறும் போது குடியரசு தலைவர் தான் தலைமை வகிப்பார். அதில் பேசுகிற உரிமை குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து உரையாற்றும் போதும் அடுத்த உரிமை குடியரசுத் தலைவருக்கு தான் வழங்கப்படும். இதுதான் மரபும் கூட. பாராளுமன்றம் என்பது இரண்டு அவைகளையும் உள்ளடக்கியது. இரண்டு அவைகளும் நடைபெற வேண்டும் என்றால், அதனுடைய பொறுப்பு குடியரசு தலைவருக்கு தான் உள்ளது " என்றும்,
மேலும், " இந்த மரபினை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இருந்து தொடங்கினோம், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இருந்து இந்த மரபை பின்பற்றப்படுகிறது, ஆனால் மரபினை பின்பற்றாமல் இவர்கள் மோடி பெயர் வர வேண்டும் என்று இப்படி செய்துள்ளனர் ", என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " இவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட நபர் தான் குடியரசுத் தலைவர் இவர்களாகவே அவரை மறுக்கின்றனர். இன்று குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இது தவறான விஷயம் உலக நாடுகள் இதனை பார்ப்பார்கள். ஆனால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; நம்மை பற்றி தரக்குறைவாக நினைத்து விடுவார்கள். மோடி ஆட்சியில் இத்தனை ஆண்டுகள் அவர்கள் ஆண்டு விட்டார்கள்; இன்னும் ஓராண்டு காலம் தான் இருக்கிறது", என்றும் கூறினார்.
" காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவினுடைய அரசியல் சாசன சட்டம் எழுதுவதற்கு அன்று அம்பேத்கர் அழைக்கப்பட்டார்: அவர் காங்கிரஸ்காரர் அல்ல; காங்கிரஸ்ருக்கு எதிரானவர். காங்கிரஸாருக்கு துணையாக கிருஷ்ணசாமி ஐயரே அன்று இருந்தார். ஆனால் சமூகத்தின் உடைய உணர்வுகளை நன்கு புரிந்தவர் மாமேதை அண்ணல் அம்பேத்கர், காங்கிரஸ் உடன் அவருக்கு வேறுபாடு இருக்கலாம், ஆனால், அவருடைய சட்டவல்லமையைப் பயன்படுத்த வேண்டும் என்று அவரை இந்திய அரசியல் சாசன சட்டம் எழுத வைத்தார் ராஜாஜி ", எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம்: "அறிக்கையை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்" ஆர்.ஜி.ஆனந்த்!
மேலும், செங்கோல் குடியரசுத் தலைவர் கையில் தான் சென்றிருக்க வேண்டும்; பிரதமர் கையில் அல்ல எனவும் கூறினார். மோடி செய்வது சர்வதிகாரம் தான் என சாடியவர், இன்னும் ஒரு சில தினங்களில் முப்படைகளுக்கும் தலைவர் நான் என்று சொல்வாரா ??? எனவும் கேள்வி எழுப்பினார்.
அதனைத்தொடர்ந்து, " தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று நாங்கள் அதை எதிர்க்க போவதில்லை, சமஸ்கிருத்திற்கு 1400 கோடி நிதி, தமிழை பலகோடி நபர்கள் பேசுகிறார்கள் அதிக நிதியை தமிழுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும். எனவே, விளம்பரத்திற்காகத்தான் இதனை செய்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி பதவியேற்பு...!