ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் சிலை திறப்பு...!

ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் சிலை திறப்பு...!

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி.யின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 17 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இதையும் படிக்க : அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவாரா? சீமான் கேள்வி!

இதனைத் தொடர்ந்து 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனாரின் 152-ஆவது பிறந்த நாளை ஒட்டி,  அவரது சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில், ப. சுப்பராயனின் பேரன் மோகன் குமாரமங்கலம், அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.