சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு ...! பீதியில் வாகன ஓட்டிகள்...!

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு ...! பீதியில் வாகன ஓட்டிகள்...!

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது 

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்கக் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்த கட்டணத்தை வசூலிப்பதற்குத்  தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 55 சுங்கச்சாவடிகள் வரையுள்ளது . தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு இருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றனர். முதல் கட்டமாக ஏப்ரல் மாதத்திலும், இரண்டாவது கட்டமாகச் செப்டம்பர் மாதத்திலும் சுங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து  இன்று நள்ளிரவு 12-மணி முதல் சுங்க கட்டணத்தை  உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவித்தனர். அதே போல் சென்னையைப் பொறுத்தமட்டில் புறநகர் பகுதியான  பரனூர், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியைப் பொறுத்தவரை சுமார் 10-ரூபாய் முதல் 60-ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். அதே போல் கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில் இருந்து 240-ரூபாயாகவும், மூன்று அச்சு வாகனங்களுக்கு 225 ரூபாயில் இருந்து 260-ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு 325- ரூபாயில் இருந்து 375-ரூபாயாகவும், ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 395- ரூபாயில் இருந்து 455-ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தியுள்ளனர். 

இதன்மூலம் சென்னையிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயருமா என அச்சத்தை  மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளனர்.